சிங்கள பேரினவாதிகளால் தமிழர்களுக்கு தீர்வு இல்லை! முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் திட்டவட்டம்

Tamils Mullaitivu Anura Kumara Dissanayaka Hinduism Sri Lanka Presidential Election 2024
By Laksi Jun 18, 2024 04:13 PM GMT
Report

சிங்கள பேரினவாதிகள் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் காெடுக்க மாட்டார்கள் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ( Kandiah Sivanesan) தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை (kurundurmalai) பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம் (18.06.2024) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலையினுடைய தொன்றுதொட்ட வரலாற்றில் இந்த பிரதேசம் ஆதிசிவன் ஐயனார் ஆலயமாக மக்களால் தொடர்ச்சியாக பூசிக்கப்பட்டு வருகின்றது.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அதிபர் தேர்தல் 

அந்தவகையில் மிக அண்மை காலங்களாக இப்பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் இங்கே சுயமாக மக்கள் வழிபடுவதற்கு அச்சப்படுகின்றனர்.

சிங்கள பேரினவாதிகளால் தமிழர்களுக்கு தீர்வு இல்லை! முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் திட்டவட்டம் | President Election Ranil Tamils Problem

மக்களின் பிரதான கோரிக்கை என்னவெனில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் மக்கள் சென்று சுமூகமான முறையில் வழிபட வேண்டும் என்பதே. அதே போன்றே இந்த ஆலயத்திற்கு பூசை செய்கின்ற பூசகர்கள் கூட இங்கே வர அஞ்சுகின்ற ஒரு சூழலே இருக்கின்றது.

அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதிலே முக்கியமான மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அதில் யாரோ ஒருவரிடைய வேலைத்திட்டமாகத்தான் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடவுள்ள மூன்று வேட்பாளர்களும், யுத்தத்தை ஆதரித்தவர்கள். யுத்தம் நடக்க காரணமாக இருந்தவர்கள். அதாவது மக்களின் இன அழிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் என்று தான் கூறலாம்.

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட மது ஒழிப்பு போராட்டம்

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட மது ஒழிப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பு 

அனுரகுமாரவை (Anura Kumara Dissanayake) அவர் அப்படி இல்லை என கூறலாம். ஆனாலும் கூட வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 13 ஆவது சீர்திருத்த சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட போது சட்டரீதியாக சென்று இணைப்பை பிரித்தவர்கள் அவர்கள் தான்.

சிங்கள பேரினவாதிகளால் தமிழர்களுக்கு தீர்வு இல்லை! முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் திட்டவட்டம் | President Election Ranil Tamils Problem

அவரும் இந்த தேர்தலிலே முக்கியமான வேட்பாளராக இருக்கின்றார். இவர்கள் தேர்தலிலே நிற்கும் போது இவர்களின் உதவி யாரோ ஒருவருக்கு தேவையாக இருக்கின்றது.

சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியாக தான் நாம் கருதுகின்றோம். ஆகவே யாத்திரையை ஒரு வழிபாட்டுக்கான நிகழ்வாக நாம் கருதவில்லை.

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் மக்கள் 

இது எங்களுடைய பிரதேசம், சங்கமித்தை தன்னுடைய சகோதரர்களுடன் மிகிந்தலைக்கு (Mihintale) சென்றிருக்கிறார். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும் அவர் குருந்தூர் மலைக்கு வந்ததாக கிடையாது.

சிங்கள பேரினவாதிகளால் தமிழர்களுக்கு தீர்வு இல்லை! முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் திட்டவட்டம் | President Election Ranil Tamils Problem

அப்படியானவர்கள் மிகிந்தலையில் இருந்து யாத்திரையாக வருகின்றார்கள் என்றால் மிகிந்தலையுடன் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

ஆகவே வெறுமனே ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை என்பதையே அவதானிக்க முடிகின்றது.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள் என்பதிலே தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆர்வம்“ என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை: நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி