பதவி விலகுகிறார் கோட்டாபய - சபாநாயகர் அறிவிப்பு
அரச தலைவர் தனது முடிவை சபாநாயகருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவித்ததாகவும், நிலுவையில் உள்ள உத்தியோகபூர்வ பணிகளை ஒப்படைப்பதற்கு புதன்கிழமை வரை கால அவகாசம் கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை, பிரதமரும் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தால், சபாநாயகர் 30 நாட்களுக்கு அரச தலைவராக நியமிக்கப்படுவார், இதனையடுத்து நாடாளுமன்றம் புதிய அரச தலைவரைத் தேர்ந்தெடுக்கும்.
President Gotabaya Rajapaksa has informed that he will resign from the Presidency on the 13th: Speaker Mahinda Yapa Abeywardena- Hiru #LKA #SriLanka #EconomicCrisisLK #SriLankaCrisis #SriLankaProtests pic.twitter.com/Q75uScryOy
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) July 9, 2022
தான் தோல்வியடைந்த அரச தலைவராக பதவி விலகப் போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச,இன்றையதினம் மக்களின் தன்னெழுச்சியான பெரும் போராட்டத்தை அடுத்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
