1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரக்கு வெற்றி...! உறுதிப்படுத்தும் நாடாராளுமன்ற உறுப்பினர்
1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமார வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அநுரகுமார ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமார வெற்றி
வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |