அதிபர் தேர்தலுக்கு வந்தால் செருப்படி : முல்லைத்தீவில் பொங்கியெழுந்த தாய்

Sri Lanka Police Tamils Mullaitivu Ranil Wickremesinghe Election
By Shadhu Shanker Jan 06, 2024 11:21 AM GMT
Report

அதிபர் தேர்தலுக்கு இங்கு வருவார்களாக இருந்தால் அவர்களுக்கு செருப்படி போட்டு கலைப்போம்” என  காவல்துறையினரின் அடாவடிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(6) நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் காவல்துறையினரின் ''அடாவடித்தனத்திற்கான இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளோம்.

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல்

நேற்றையதினம் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதிபர் தேர்தலுக்கு வந்தால் செருப்படி : முல்லைத்தீவில் பொங்கியெழுந்த தாய் | Presidential Election We Will Pay Them Bribe Ranil

பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு போராட்டம் செய்து உறவுகளை மீட்க உரிமை இருக்கின்றது அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை அகிம்சை வழியில் போராடி தங்கள் உறவுகளை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று அதிபர் வவுனியாவிற்கு சென்ற வேளை அவர்கள் நியாயம் கேட்க போனமுறையில் அதனை முறியடித்து பாதிக்கப்பட்ட உறவுகளை வன்மையாக அடித்து கைது செய்யப்பட்டுள்ளமையினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் அவர் தன்னுடைய கணவரை கேட்பது பிழையா அதிபராக இருந்து அவர் அடுத்தகட்டம் அதிபராக வருவதற்காக ரணில் விக்ரமசிங்க வருகின்றார் என்றால் அவர் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சந்திக்கத்தான் வருகின்றார்.

ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்

ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க போவதாக வரும்போது அந்த உரிமைகளை கேட்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு வடக்கு கிழக்கில் யாருக்கு அவர் உரிமை கொடுக்கப் போகின்றார் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்குத்தான் உரிமை கொடுக்க வேண்டும்.

அதிபர் தேர்தலுக்கு வந்தால் செருப்படி : முல்லைத்தீவில் பொங்கியெழுந்த தாய் | Presidential Election We Will Pay Them Bribe Ranil

தமிழ் மக்களை சந்தித்து சர்வதேசத்திற்கான பதில் சொல்ல வேண்டும் என்று வந்த இடத்தில் எமது பாதிக்கப்பட்ட உறவு கணவரை 16 ஆண்டுகளாக கொடுத்துவிட்டு தனது குழந்தைகளை வளர்த்து கஸ்டமான நிலையிலும் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்த ஜெனிற்ராவை பல தடவைகள் கைது செய்ய முயற்சி செய்து கைது செய்துள்ளார்கள்.

முன்கூட்டியே காவல்துறையினர் தடை உத்தரவினை போடுகின்றார்கள் இது காவல்துறையினரின் திட்டமிட்ட முறையில் போராட்டங்களை நசுக்கவேண்டும் என்று செயற்படுகின்றார்கள்.

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள் : மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள் : மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பெண்களின் பிரச்சினை

முல்லைத்தீவு மாவட்ட காவல்துறையினர் என்னையும் தேடி ஈஸ்வரி எங்கே ஈஸ்வரி வீடு எங்கே என்று தேடி இரவு 9.45 மணிக்கு வருகின்றார்கள் நாங்கள் என்ன கடத்தல் வியாபாரம் செய்பவர்களா அல்லது கஞ்சா வியாபாரம் செய்பவர்களா எங்களை அப்படி தேடுவதற்கு.

அதிபர் தேர்தலுக்கு வந்தால் செருப்படி : முல்லைத்தீவில் பொங்கியெழுந்த தாய் | Presidential Election We Will Pay Them Bribe Ranil

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு யார் வந்தாலும் நியாயம் கேட்க போவது உரிமை இந்த நியாயத்தினை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உரிமை இல்லை காவல்துறையினர் தமிழ் பெண்கள் மீது கை வைப்பது வன்மையான செயல். '

காவல்துறையினர் தோளில் பிடிக்கின்றார்கள், கையில் பிடிக்கின்றார்கள், நெஞ்சில் பிடிக்கின்றார்கள், ஆண் காவல்துறையினர் இவ்வாறு செய்கின்றார்கள் பெண்களை இழுப்பதற்கு இவர்களுக்கு உரிமை இல்லை அவ்வாறு கதைக்க தொடங்கினால் பெண்களின் பிரச்சினைக்கு இவர்கள் முகம் கொடுக்கமுடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் மீது துஸ்பிரயோகம் செய்து பெண்ணை வன்முறைப்படுத்துகின்றார்கள் காவல்துறையினர் சப்பாத்து கால்களால் உதைக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட தாய்க்கு இவ்வாறு செய்வது மிகவும் ஒரு கொடுமையான விடயம் காவல்துறையினரின் அடிவாடித்தனம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் காவல்துறையினருக்கும் எங்களுக்குமான போராட்டம் இனித்தான் வெடிக்கப் போகின்றது."  என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026