உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னாள் ஆட்சியாளர்களின் பாராமுகம்! கர்தினால் ஆதங்கம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இன்று (21.04.2026) நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் காட்டிவரும் தாமதம் குறித்து கவலை கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், குற்றப் புலனாய்வுத் துறை விசாரிப்பது அவசியம்.

தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது என்பது நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதே ஆகும்.
மேலும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் விசாரணைகளில் உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது” என கர்தினால் மால்கம் ரஞ்சித் மேலும், வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும் 39 நிமிடங்கள் முன்