இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்....

Missing Persons Sonnalum Kuttram
By Vanan Oct 28, 2023 01:57 PM GMT
Report

ஈழத்து தாய்மார் என்றவுடன் நம் எல்லோரின் கண்களின் முன்னும் வந்துபோகும் உருவம் வீதிவீதியாக தமது உறவுகளை தொலைத்துவிட்டு தேடி அலையும் தாய்மார்களின் முகங்கள் தான்.

அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் வலிகளில் அவர்களும் ஓர் அங்கமாகி விட்டார்கள்.

தமது உறவுகளை தொலைத்து அவர்களை வலிந்து காணாமல் ஆகச்செய்த அரச இராணுவம் அதன் ஒட்டுக் குழுக்களுக்கும் கூட அவர்கள் இன்றுவரை பெருந்தலையிடி என்றே கூறிக்கொள்ளலாம்.   

யார் தான் விமர்சிக்க முடியும் 

2500 நாட்களைக்கடந்து தமது உறவுகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் சுழற்சி முறையில் உண்ணாவிரதமிருந்து நீதியை வலியுறுத்தி வந்தவர்கள் அவர்கள்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

ஆனால் அவ்வப்போது அரசியல் சாயத்தைப் பூசிக் கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், எமது தாயகப் பிரதேசத்திலும் சரி ஈழத்தமிழர்களிடத்திலும் இப்படியாக நீண்ட தொடர்போராட்ட இயங்கியலை யாருமே கொண்டிராததாலும், அதேநேரம் அவர்கள் கண்ணீரோடு தேடிக்கொண்டிருப்பது எமது தேசத்தின் வேர்களாக எம்மைக் காத்து நின்ற உன்னதமான மறவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை தேடித்தேடி தமது பொழுதுகளை கழித்துக்கொண்டுருக்கும் அவர்களை யார்தான் விமர்சிக்க முடியும்.   

அப்படி விமர்சிப்பவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.  அல்லது அவர்கள் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துகொண்டே இருக்கிறது.   

அந்த அளவுக்கு கௌரவத்தோடு நோக்கப்படவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவேண்டிய அந்த தாய்மாரின் கலப்பில்லாத அந்த போராட்டம் இன்று என்ன நிலையில் இருக்கிறது.   

சந்தி சிரிக்கிறது போராட்டம்

ஆமை புகுந்த வீடு என்னவோ ஆகும் என்று சொல்லுவார்களே அப்படியாக சந்தி சிரிக்கிறது போராட்டம்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

அந்த தாய்மாரியே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர்களாலோ அல்லது சலுகைகளுக்கும் சன்மானங்களுக்குமாக விலைபோனவர்களோ இன்று நாலுபேர் சிரிக்குமளவிற்கு அழைத்து வந்து விட்டிருக்கிறர்கள். 

இவ்வளவு நாளும் இங்கு நிகழ்ந்த சிலவற்றை கண்டும் கடந்துபோனவர்கள் இன்று நிலைமை கை மீறி போய் விட்டதோ என எண்ணுமளவிற்கு மாறியிருக்கிறது. 

“முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இவர்களிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்கள் அதனை சமாளித்துக்கொண்டனர்.

ஊடகங்களும் அதனை பெரிதுபடுத்தாது விட்டுச் சென்றது. ஆனால் இன்று வவுனியாவில் தங்களுக்குள் மோதிக்கொண்டவர்கள் காவல் நிலையம் வரை செல்லாது தவிர்த்து இருக்க வேண்டும்.

அவ்வாறு சென்றிருந்தாலும் காவல் நிலையத்தில் சமாதானமாகி விலகிச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் போராட்டங்கள் எங்கும் காவல்துறையினரின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்கள் இன்று அதே காவல்துறையினரிடம் சென்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி முறையிடுகிறார்கள்.

எந்த காவல்துறையினர் எங்கள் போராட்டத்தை நசுக்குகின்றார்கள், எங்களை அச்சுறுத்துகிறார்கள் என் குற்றம் சாட்டி நின்றோமோ, அதே காவல்துறையினரிடம் சென்று எமக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி முறையிட்டு நிற்கிறோம். 


தயவு செய்து பிரச்சினைகளை உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளை இழந்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்.

ஒரு வேளை அந்த உறவுகள் இன்று நீங்கள் பிணக்குத் தீர்க்கச் சென்றிருக்கும் சிறிலங்க அரச இயந்திரத்தால் ஏனையவர்களைப் போலவே படுகொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களின் அந்த புனித ஆத்மா அவர்கள் பட்ட வலிகளையும் மறந்து கண்ணீர் வீட்டு ஓவென்று அழும்.

உங்கள் இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

எமது தேசத்திற்காக தங்களை தியாகதித்த அந்த புனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

நாங்கள் சிறிலங்கா அரசிடம் நீதிகேட்டுப் போராடவில்லை.  அவர்கள் நிகழ்த்திய அநீதிகளுக்காக நீ்திகோரிப் போராடியவர்கள்” எனச் சிலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024