இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்....

Missing Persons Sonnalum Kuttram
By Vanan Oct 28, 2023 01:57 PM GMT
Report

ஈழத்து தாய்மார் என்றவுடன் நம் எல்லோரின் கண்களின் முன்னும் வந்துபோகும் உருவம் வீதிவீதியாக தமது உறவுகளை தொலைத்துவிட்டு தேடி அலையும் தாய்மார்களின் முகங்கள் தான்.

அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் வலிகளில் அவர்களும் ஓர் அங்கமாகி விட்டார்கள்.

தமது உறவுகளை தொலைத்து அவர்களை வலிந்து காணாமல் ஆகச்செய்த அரச இராணுவம் அதன் ஒட்டுக் குழுக்களுக்கும் கூட அவர்கள் இன்றுவரை பெருந்தலையிடி என்றே கூறிக்கொள்ளலாம்.   

யார் தான் விமர்சிக்க முடியும் 

2500 நாட்களைக்கடந்து தமது உறவுகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் சுழற்சி முறையில் உண்ணாவிரதமிருந்து நீதியை வலியுறுத்தி வந்தவர்கள் அவர்கள்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

ஆனால் அவ்வப்போது அரசியல் சாயத்தைப் பூசிக் கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், எமது தாயகப் பிரதேசத்திலும் சரி ஈழத்தமிழர்களிடத்திலும் இப்படியாக நீண்ட தொடர்போராட்ட இயங்கியலை யாருமே கொண்டிராததாலும், அதேநேரம் அவர்கள் கண்ணீரோடு தேடிக்கொண்டிருப்பது எமது தேசத்தின் வேர்களாக எம்மைக் காத்து நின்ற உன்னதமான மறவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை தேடித்தேடி தமது பொழுதுகளை கழித்துக்கொண்டுருக்கும் அவர்களை யார்தான் விமர்சிக்க முடியும்.   

அப்படி விமர்சிப்பவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.  அல்லது அவர்கள் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துகொண்டே இருக்கிறது.   

அந்த அளவுக்கு கௌரவத்தோடு நோக்கப்படவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவேண்டிய அந்த தாய்மாரின் கலப்பில்லாத அந்த போராட்டம் இன்று என்ன நிலையில் இருக்கிறது.   

சந்தி சிரிக்கிறது போராட்டம்

ஆமை புகுந்த வீடு என்னவோ ஆகும் என்று சொல்லுவார்களே அப்படியாக சந்தி சிரிக்கிறது போராட்டம்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

அந்த தாய்மாரியே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர்களாலோ அல்லது சலுகைகளுக்கும் சன்மானங்களுக்குமாக விலைபோனவர்களோ இன்று நாலுபேர் சிரிக்குமளவிற்கு அழைத்து வந்து விட்டிருக்கிறர்கள். 

இவ்வளவு நாளும் இங்கு நிகழ்ந்த சிலவற்றை கண்டும் கடந்துபோனவர்கள் இன்று நிலைமை கை மீறி போய் விட்டதோ என எண்ணுமளவிற்கு மாறியிருக்கிறது. 

“முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இவர்களிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்கள் அதனை சமாளித்துக்கொண்டனர்.

ஊடகங்களும் அதனை பெரிதுபடுத்தாது விட்டுச் சென்றது. ஆனால் இன்று வவுனியாவில் தங்களுக்குள் மோதிக்கொண்டவர்கள் காவல் நிலையம் வரை செல்லாது தவிர்த்து இருக்க வேண்டும்.

அவ்வாறு சென்றிருந்தாலும் காவல் நிலையத்தில் சமாதானமாகி விலகிச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் போராட்டங்கள் எங்கும் காவல்துறையினரின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்கள் இன்று அதே காவல்துறையினரிடம் சென்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி முறையிடுகிறார்கள்.

எந்த காவல்துறையினர் எங்கள் போராட்டத்தை நசுக்குகின்றார்கள், எங்களை அச்சுறுத்துகிறார்கள் என் குற்றம் சாட்டி நின்றோமோ, அதே காவல்துறையினரிடம் சென்று எமக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி முறையிட்டு நிற்கிறோம். 


தயவு செய்து பிரச்சினைகளை உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளை இழந்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்.

ஒரு வேளை அந்த உறவுகள் இன்று நீங்கள் பிணக்குத் தீர்க்கச் சென்றிருக்கும் சிறிலங்க அரச இயந்திரத்தால் ஏனையவர்களைப் போலவே படுகொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களின் அந்த புனித ஆத்மா அவர்கள் பட்ட வலிகளையும் மறந்து கண்ணீர் வீட்டு ஓவென்று அழும்.

உங்கள் இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

எமது தேசத்திற்காக தங்களை தியாகதித்த அந்த புனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

நாங்கள் சிறிலங்கா அரசிடம் நீதிகேட்டுப் போராடவில்லை.  அவர்கள் நிகழ்த்திய அநீதிகளுக்காக நீ்திகோரிப் போராடியவர்கள்” எனச் சிலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025