இங்கு யாரும் மன்னர் இல்லை! ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்த குறித்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றியிருந்தார். இந்நிலையில் ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.
யாரும் மன்னர் இல்லை
“இங்கு யாரும் மன்னர் இல்லை” என்ற வலியுறுத்தலுடன் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “இந்த போராட்டங்கள் அர்த்தமற்றது. அவர்கள் தன்னை ஒரு மன்னர் என குறிப்பிடுகிறார்கள். நான் மன்னர் இல்லை.
அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். அமெரிக்க நலன்களை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
