தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே மாகாண சபை முறைமை - ஆதரவளிக்கும் ஜே.வி.பி!
மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.
மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை
மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நேரம், சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கப்பாடான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நோக்கத்திற்காக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது நிலைமை மாறி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

