யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய வேலைத்திட்டம்! (படங்கள்)
Jaffna
Kilinochchi
Sri Lanka Social Media
Water
By Nithusan
வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்குவதற்காகவே குறித்த பகுதியில் கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம்; சாவகச்சேரி, கரவெட்டி, கொடிகாமம் மற்றும் புத்தூர் என பல பிரதேசங்களுக்கு இந்த திட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில்

யாழ்ப்பாணத்தில் பாரிய வேலைத்திட்டம் இடம்பெற்றுகொண்டு இருப்பதாக கடல் நீரை நன்நீராக சுத்திகரிக்கும் பணி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


