இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக மகாராணி தெரிவித்த விடயம்
பாதிரியார் வெளியிட்ட தகவல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணம் அடைவதற்கு ஐந்து தினங்கள் முன்பாக தன்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பற்றி, பாதிரியார் மற்றும் ராணியின் நண்பர் ஒருவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன் படி, ராணி எலிசபெத் மறைவதற்கு ஐந்து நாட்கள் முன்பாக, ஓய்வு பெற்ற பாதிரியாரான Iain Greenshields என்பவர், அவரை சந்தித்துள்ளார்.
அப்போது, அவரிடம் ராணி பேசிய விவரங்கள் குறித்து Iain Greenshields தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ராணியாக பதவியேற்ற காலத்தில், நாட்டை ஆள ஞானம் வேண்டும் என கடவுளிடம் கேட்டுக் கொண்டதாகவும், அது அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தததாகவும் கூறி உள்ளார்.
எந்த வருத்தமும் கிடையாது
மேலும், தனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கிடையாது என ராணி கூறியதாக குறிப்பிடும் GreenShields, அவரிடம் அதிகாரம் இருந்த போதிலும் மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் தனது நாட்டுக்காக உழைப்பதில் தான் தீவிரம் காட்டினார் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல, ராணி எலிசபெத்தை சந்தித்த போது, வாழ்நாளின் கடைசி நாட்களில் இருப்பது போல எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மிகவும் ஆரோக்கியமாக இருந்த அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தன்னிடம் ராணி பேசிய போது மிகவும் உற்சாகமாக நிறைய நகைச்சுவைகள் கூறி பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.