பிரித்தானிய மகாராணியையே காக்க வைத்த தமிழனைத் தெரியுமா ?
தற்போது இங்கிலாந்து மகாராணியின் 70 வது அரசாட்சி தினம் மிகவும் விமர்சையாக இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த வேளையில் கொழும்பு வந்த பிரித்தானிய மகாராணியையே காக்க வைத்த தமிழன் வரலாற்றையும் அறிந்திருத்தல் முக்கியம் அல்லவா.
1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி முதல் தனது தந்தையின் மறைவின் பின்னர் அரசியாகவும், 1953ம் ஆண்டு யூன் மாதம் 2ம் திகதி முடி சூடிக்கொண்டவர் எலிசபெத் மகாராணி.
1954ஆம் ஆண்டு கொமன்வெல்த் நாடுகளில் ஒரு சூறாவளி சுற்றுப்பயனத்தை மேற்கொண்டார் மகாராணி இரண்டாம் எலிசபெத்.
அவுஸ்ரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் மாதம் 1954ம் ஆண்டு கப்பலில் இலங்கை வந்தார்.
அப்போது அவரை அழைக்க இலங்கையின் பிரதமராக அப்போது இருந்த சேர் ஜோன் கொத்தலாவல (12 October 1953 – 12 April 1956) அப்போதய கொழும்பு நகர பிதா தில்லைநாதன் உருத்திராவிற்கு (21.09.1953 - 13.08.1954) தெரிவிக்காமல் சென்றிந்தார் .
தன் பதவிக்கு மதிப்பளிக்காத காரணத்தால், தன் உத்தரவில்லாமல் வருகையாளர்கள் யாரும் கொழும்புக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிட்டார் மேயர் ரி. உருத்திரா.
நிலைமையின் தாக்கத்தை உணர்ந்த சேர் ஜோன் கொத்தலாவல, தன் தவறை கூறி, மகாராணியை அழைக்க நகர பிதா ரி. உருத்திராவையே அனுப்பி வைத்தார்.
வட்டுக்கோட்டையை சேர்ந்த தில்லைநாதன் உருத்திரா, பின்னர் கொழும்பில் வாழ்ந்து வந்திருந்த காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் வெள்ளவத்தை வட்டாரத்தில் போட்டியிட்டு 1946ல் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.