காட்டு பங்களாவில் பதுங்கியிருக்கும் ராஜபக்ச குடும்பம்: அம்பலமான தகவல்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் தங்கியிருக்கும் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை கடற்படைத் தளத்தின் பகுதியில் கப்பல்துறை தளத்தில் உள்ள Pillow House எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென குறித்த ஊடகத்தின் உள்ளக பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கற்படை இல்லம் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் Pillow House மாளிகை காட்டில் அமைந்துள்ளது.
அதைச் சுற்றி பல ரகசிய இடங்கள் உள்ளன. Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மகிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,