ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி

Anura Kumara Dissanayaka Sri Lanka Rajapaksa Family
By Raghav Feb 28, 2025 05:38 AM GMT
Report

ராஜபக்‌சவின் ஊழல் மோசடிகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (27.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 2005ஆம் ஆண்டில் ராஜபக்சவினரை இப்போது ஆட்சியில் இருப்பவர்களே ஆட்சிக்கு கொண்டு வந்தனர். 

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு...! ஏமாற்றும் பிரதமர் - சாடும் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு...! ஏமாற்றும் பிரதமர் - சாடும் ஆசிரியர் சங்கம்

ராஜபக்சவினர் மோசடி

அப்போது நான் ராஜபக்‌சவினருக்கு எதிரான முகாமிலேயே இருந்தேன். அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற மேடையிலேயே இருந்தேன்.

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி | Rajapaksa Gov Is Responsible Corruption And Fraud

ஆனால் ராஜபக்சவினர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று இப்போது கூறுபவர்கள்,அவர்தான் சிறந்த நபர் என்று கூறும் மேடையிலேயே இருந்தனர். நீங்கள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களின் பெறுபேறுகளையே இப்போது நீங்கள் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சவினர் திருடர்கள் என்று தெரிந்துகொண்டே அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்தீர்கள். ஹெல்பிங் அம்பாந்தோட்டை திட்டத்தில் மோசடி குற்றச்சாட்டில் மகிந்த ராஜபக்சவின் பெயர் தெரிவிக்கப்பட்டிருந்ததை அறிந்துகொண்டே அவரை பிரதமராக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்திருந்தது.

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை...! சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி

ஊழல் கலாசாரம்

நீங்கள் அரசாங்கத்தை எடுப்பதற்காக 77/88 காலத்தில் கஷ்டப்பட்டீர்கள். லெனின் அரசாங்கத்தை அமைப்பதாக கூறினாலும் அந்த அரசாங்கத்தை செய்யவில்லை. 

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி | Rajapaksa Gov Is Responsible Corruption And Fraud

ஐக்கிய மக்கள் சக்தி கூறும் அரசாங்கத்தையே செய்துள்ளீர்கள் மேலும் ராஜபக்சவினரின் மோசடிகளை கூறும் போது எங்களை பார்த்து கூற வேண்டாம்.

அன்று நீங்கள் எடுத்த தவறான தீர்மானத்திற்கே இன்று மக்கள் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டியுள்ளது. 2005இல் நீங்கள் தனியாக போட்டியிருந்தால் அப்போது ராஜபக்சவினர் தோல்வியடைந்திருப்பர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை : நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார 

2005ஆம் ஆண்டின் பின்னரே இந்த நாட்டில் ஊழல் கலாசாரம், குடும்ப ஆட்சி உருவானது. அதனை நீங்களே கொண்டு வந்தீர்கள். 

ராஜபக்‌சவினரின் ஊழல் மோசடிகளுக்கு அநுர அரசே பொறுப்பு : சபையில் சாடிய எதிர்க்கட்சி | Rajapaksa Gov Is Responsible Corruption And Fraud

இதில் உங்களுக்கும் பங்கு உள்ளது. அதனால் நீங்கள் ராஜபக்சவினர் தொடர்பில் கூறும் போது எங்களை பார்க்காது ராஜபக்சவினரின் படங்களை பார்த்து கூறுங்கள்.

அதேபோன்று கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி அதிகமான அமைச்சுக்களை வைத்திருக்கும்போது அதற்கு எதிராக எதிர்க்கட்சியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்து வந்தார்.

நானும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தேன், ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கீழ் பாரியளவில் அமைச்சுக்கள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்...! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம்...! நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: திருமண நிகழ்விற்கு செல்வதாக ஹோட்டலில் தங்கிய கொலை சூத்திரதாரிகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: திருமண நிகழ்விற்கு செல்வதாக ஹோட்டலில் தங்கிய கொலை சூத்திரதாரிகள்

You may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024