கோமாளித் தனங்களுக்கு இடமளிக்க முடியாது - கடுமையாக சாடிய சஜித்
ராஜபக்சக்களின் கைப்பாவை ஒருவரை அதிபராக்கி, மொட்டு அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "மக்களால் நிராகரிக்கப்பட்ட நிதியமைச்சரும், அதிபரும்,பிரதமரும் வெளியேறிச் சென்ற போதிலும் இன்று அவர்களின் கைப்பாவை ஒருவரை அதிபராக்கி, மொட்டு அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை அழித்து வருகிறது .
மக்கள் துன்பங்களை அநுபவிக்கும் வேளையிலும், காக்கை அரசாங்கம் தமக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதன் மூலம் பெரும் வரப்பிரசாதங்களை வழங்குகின்றன.
சீனியில்லாமல் தேநீர் குடித்தது போல
தற்சமயம் வரை அமைச்சரவை அமைச்சர்கள் 20,இராஜாங்க அமைச்சர்கள் 38 மற்றும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட 69 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.
மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவுக்கு 134 வாக்குகளை வழங்கியவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தி வருவதாகவும் அமைகிறது.
70 - 77 காலத்தில் சீனியில்லாமல் தேநீர் குடித்தது போலவும், மிளகாய் இல்லாமல் உணவுன்டது போலவும், அமையார் என்ன சொன்னாலும் செய்பவர்களும் இருந்தார்கள் போலவே,மொட்டு அரசாங்கத்தால் உரம் இல்லாமல் பயிரிடலாம் அரிசி இல்லாமல் சோறு சாப்பிடலாம் என்றும்,மின்சாரம் இன்றி மக்கள் பொறுமை காப்பார்கள் எனவும் இந்த அரசாங்கம் நினைக்கிறது.
மின்சாரக் கட்டணத்தின் விலையை 75 சதவீதம் உயர்த்தி, எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளால் தாங்க முடியாத ஒரு நாட்டை உருவாக்கியது ஒரு சாம்பியன்.
உலக சுகாதார ஸ்தாபனம்
அதற்கு முன் நன்றாக இருந்த நாட்டிற்கு சாம்பியனொருவன், வீரனொருவன், ஹீரோவொருவன் வேண்டும் என மக்கள் நினைத்தாலும், அந்த வீரன்,ஹீரோ வந்தவுடனையே இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிட்டது.
கொரோனா மரணத்தை தகனம் மற்றும் அடக்கம் செய்வது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் சரியான முடிவை வழங்கியிருந்த போது, இந்த ஹீரோ தன் கருத்துப்படி செயற்பட்டதாகவும், இதனால் தான் மக்கள் சபித்தனர். நாகராஜ கோலம் போட்டு பொய் கூறி நாட்டில் பீடனை ஏற்படாது என ஆடம்பரபட்டனர். அந்த சாபம் நாட்டையே பாதித்தது. இறுதியில் அதிபருக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது.
எனவே, சாதாரண மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக் கோமாளித்தனங்களுக்கு இடமளிக்க முடியாது
எதிர்காலத்தில் பொது மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு அணிதிரள்வோம்" என்றார்
