ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் - சஜித்
ராஜபக்சக்கள் கலிங்க மாகன் தலைமுறையினருக்கே சொந்தமானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இன்று(27) கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற வெல்லவாய தேர்தல் தொகுதிக்கான தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “சுபீட்சத்தின் தொலைநோக்கை முன்னிலைப்படுத்தி நாட்டிற்கு சுபீட்சத்தை கொண்டு வர 2019 ஆம் ஆண்டு வீராப்பு பேசி ராஜபக்சக்கள் வந்தாலும், இறுதியில் செல்வத்தையே இழக்கும் அளவிற்கு நாட்டை வக்குரோத்தாக்கினர்.
பசிலின் மீள் வருகை

மலைநாட்டு கிளர்ச்சியில் வெள்ளையர்களைப் போலவே கலிங்க மாகனின் படையெடுப்புகளாலும் நாட்டிலுள்ள களஞ்சியங்கள் உட்பட அனைத்து தோட்டங்களையும் அழித்தது போல், இவர்களும் கடந்த காலத்தைப் போலவே நாட்டின் விவசாயத்தை முற்றிலுமாக அழித்தார்கள்.
2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவரும், நாட்டை விட்டு தப்பி ஓடிய பசில் ராஜபக்சவும் ஆச்சரியமான முன்னோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த மீண்டும் வருவதாக மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டாலும், இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்த குற்றத்தின் முக்கிய குற்றவாளி அவரே.
பழமையான நாகரிகத்தையும், பழமையான கலாசாரத்தையும் கொண்டிருந்த எமது நாடு தற்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு ராஜபக்சர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொட்டுவின் செயலாளர் வருவதாகக் கூறும் நபர், நாட்டை அழித்த கலிங்க மாகன் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏற்றுமதித் துறைகளுக்கு அதிக வரி

தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என்று கூறினாலும், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைத்துறை போன்ற டொலர்களை ஈட்டும் ஏற்றுமதித் துறைகளுக்கு அதிகளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் இந்தச் செயல்களை எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது.
நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் துறைகளைப் பலப்படுத்துவதே மேற்கொள்ளப்பட வேண்டிய பணி. சிறந்ததொரு வேலைத்திட்டத்தின் மூலமே இந்நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியும். இல்லை, இயலாது என்ற வார்த்தைகளை அரசியல் சொற்களஞ்சியத்திலிருந்து நீக்க வேண்டும்.
எதிர்க்கட்சியாக, அது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தியால் மக்களுக்காக பல பணிகளைச் செய்ய முடிந்துள்ளது” என்றார்.