சர்வதேசத்தின் தலைப்பாக மாறிய சிறிலங்கா - பாரிய நெருக்கடியில் கோட்டாபய
றம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற கலவரத்துடன், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனம் தீவிரமடைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் சிறிலங்காவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு பிரபல சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்திகளாக செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் கொள்கலன் தாங்கிக்கு தீ வைக்க முயற்சித்த போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மனிதாபிமானமற்ற முறையில் நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக் கொல்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்? என பல தரப்பினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்புடன் இணைந்திருங்கள்.