சந்திப்பை புறக்கணித்து லண்டன் பறந்தார் ரணில் - தொடரும் நெருக்கடி
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்துவதற்கான சிக்கல்கள் இதுவரை தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த செயற்பாட்டிலிருந்து விலகியே உள்ளனர்.
இதனால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மட்டுமல்ல அடுத்து நடக்கப்பபோகும் சாதாரண தர மாணவர்களும் பாதிக்கப்படவுள்ளமை கண்கூடு.
ரணிலை சந்திக்க கோரிக்கை
இந்த நிலையில் உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அதிபர் ரணிலை சந்திக்க பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும் அவர் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
"விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன. சந்திப்புக்கான அனுமதியை நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கோரியிருந்தோம். கலந்துரையாடலை நடாத்தாமல் நாட்டிலிருந்து செல்வது நல்லதல்ல.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தடைப்படுவதற்கான காரணம் யார் என்ற கேள்வியே எழுகிறது" என இலங்கை ஆசிரியர் ஒன்றியப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
