கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய வணிக வளாகம் திறப்பு !
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட “The Mall” வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது நேற்றைய தினம் (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கருத்து
இது தொடர்பாக அவர் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது.
சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.
அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளன.
வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி முன்னெடுக்கப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |