கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி

Jaffna Ranil Wickremesinghe India Kachchatheevu
By Sumithiran Sep 21, 2024 11:24 AM GMT
Report

காஷ்மீர் பிரச்சனையை எப்படி பாகிஸ்தானுடன் இந்தியா(india) பேசமாட்டாதோ அதேபோன்றுதான் கச்சதீவு விவகாரத்திலும் நாம் இந்தியாவுடன் பேசமாட்டோம். ஏனெனில் கச்சதீவு எமது பகுதியாகும்.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்தப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி:- இந்தியா-இலங்கை(sri lanka) இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா..!

 பேச எதுவுமில்லை

பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன்(pakistan) பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி | Ranil Says Katchatheevu Belongs To Sri Lanka

கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா..! 

பதில்:- நாம் இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்கள் காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.

இலங்கையில் ஒரு திருப்புமுனை - வாக்களித்து திரும்பிய ரணில் கருத்து

இலங்கையில் ஒரு திருப்புமுனை - வாக்களித்து திரும்பிய ரணில் கருத்து

கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே..!

அது முடிந்து போன பிரச்சனை

பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவர்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயக்காவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி | Ranil Says Katchatheevu Belongs To Sri Lanka

கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா..!

பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.

கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா!

பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே...

திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன்

திருகோணமலையில் 106 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய குடிமகன்

கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே...

இந்தியாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை

பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி | Ranil Says Katchatheevu Belongs To Sri Lanka

 கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா!

பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை படம் எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை படம் எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

இந்திய வெளியுறவு அமைச்சர் 

கேள்வி:- இந்திய வெளியுறவு அமைச்சர் கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே!

கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி இந்தியாவுடன் பேச எதுவுமில்லை : ரணில் சிறப்பு பேட்டி | Ranil Says Katchatheevu Belongs To Sri Lanka

பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் அளித்தார்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில்(jaffna) உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. அமர்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 

நுவரெலியாவில் வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம்

நுவரெலியாவில் வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023