தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils M. A. Sumanthiran Ranil Wickremesinghe
By Sathangani Sep 03, 2024 10:57 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

இந்தநிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், இந்த பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கத் தீர்மானித்து அறிவித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை நாளையும் நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற நிலையில், தமது பிரேரணையை நாளைய நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்காவிட்டால், ஜனாதிபதி தமிழ் மக்கள் முன்பாகவும் நாட்டு மக்கள் முன்பாகவும் இனவாதியாக காட்டப்படுவார் என எச்சரித்தார்.

நான் செய்யவிருந்த ஒரு விடயத்திற்கு அனுமதி கொடுப்பதாக சொல்லி விட்டு கடைசி நேரத்தில் இவ்வாறு தடுப்பதன் மூலமாக எங்கள் மக்கள் மீது வெறுப்பைக் காட்டும் நிகழ்ச்சியாக தான் நாம் இதைப் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

கருத்து தெரிவித்த அமைச்சர்கள் 

இதனை அடுத்து சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க (Gevindu Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) ஆகியோர் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதியாக மீண்டும் எழுந்த சுமந்திரன், ரணில் விக்ரமசிங்க இந்த தனி நபர் பிரேரணையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக தமக்கு உறுதியளித்திருந்தாகவும், ஆனால் அவர் தற்போது மிகப்பெரிய இனவாதியாக செயற்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024