தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils M. A. Sumanthiran Ranil Wickremesinghe
By Sathangani Sep 03, 2024 10:57 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

சிதறடிக்க அல்ல சிறகடிக்க!: வெளியாகவுள்ள திலகரின் தேர்தல் விஞ்ஞாபனம்

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

இந்தநிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், இந்த பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கத் தீர்மானித்து அறிவித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை நாளையும் நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற நிலையில், தமது பிரேரணையை நாளைய நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்காவிட்டால், ஜனாதிபதி தமிழ் மக்கள் முன்பாகவும் நாட்டு மக்கள் முன்பாகவும் இனவாதியாக காட்டப்படுவார் என எச்சரித்தார்.

நான் செய்யவிருந்த ஒரு விடயத்திற்கு அனுமதி கொடுப்பதாக சொல்லி விட்டு கடைசி நேரத்தில் இவ்வாறு தடுப்பதன் மூலமாக எங்கள் மக்கள் மீது வெறுப்பைக் காட்டும் நிகழ்ச்சியாக தான் நாம் இதைப் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

கருத்து தெரிவித்த அமைச்சர்கள் 

இதனை அடுத்து சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க (Gevindu Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) ஆகியோர் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதியாக மீண்டும் எழுந்த சுமந்திரன், ரணில் விக்ரமசிங்க இந்த தனி நபர் பிரேரணையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக தமக்கு உறுதியளித்திருந்தாகவும், ஆனால் அவர் தற்போது மிகப்பெரிய இனவாதியாக செயற்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி

சஜித்தின் ஆதரவை உற்றுநோக்கும் தென்னிலங்கை: சிங்கள மக்களுக்கு சுமந்திரனின் முக்கிய செய்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வத்தளை

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, சென்னை, India

04 Jan, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025