இலங்கையில் கல்வி மலடாகிப் போய்விட்டது! ரணில் வெளியிட்ட தகவல்
நாட்டின் எதிர்காலம் குறித்த பார்வையும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதும் தமது கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க(Ranil wickramasinge) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேரும் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலியை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,
டி.எஸ். சேனாநாயக்கவை இன்று நினைவு கூரும் நாம் இலங்கையில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதலாவது கட்சி என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
எதிர்கால பார்வையும் எதிர்காலத்தை உருவாக்கும் கட்சியாக நாம் இதனை ஆரம்பித்துள்ளோம். எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில், 2003 ஆம் ஆண்டு நாட்டை அரிசியினால் தன்னிறைவு அடைசெய்தேன்.
அது மாத்திரமல்ல சுவசெரியாவை ஆரம்பித்தோம். இது போன்று நாம் எதிர்காலத்தை நோக்கிய பார்வையை கொண்டிருந்தாலும் ஏனையோருக்கு அந்த பார்வை இருக்கவில்லை.
பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனியை வழங்க முயற்சித்த போது, உள்ளேயும் வெளியேயும் அதனை எதிர்த்தனர். நாம் மலடாகி போவோம் எனக் கூறினர். தற்போது கல்வி மலடாகி போயுள்ளது.
நாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாத்திரம் பெறும் அளவில் தோல்வியடைந்தோம். எனினும் எம்மால் எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் அமைப்புகளில் எதிர்காலத்தை நோக்கிய பார்வையும் நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் திறனும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.