ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி!

Ranil Wickremesinghe Narendra Modi India
By Jaso Jun 16, 2024 01:13 PM GMT
Report

சஜித்தும்(Sajith )அனுரவும்( Anura) கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணப் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் வைபவத்தில் கலந்துகொண்டு இலங்கையில் எப்படி பெரிய ஊடக நிகழ்ச்சியை நடத்துவது என்று அதிபர் ரணில்(ranil) திட்டமிட்டிருந்தார்.

அதன்படி இந்திய விஜயத்தின் போது மோடியை (modi) முதலில் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதும், அழைப்பை ஏற்று இலங்கையில் பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்துவதும் அதிபரின் திட்டமாக இருந்தது.

ரணிலின் திட்டம்

அதிபர் தேர்தலின் போது எப்படியாவது மோடியை இலங்கைக்கு வரவழைத்து தேர்தல் மேடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திரைமறைவில் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலை அவர் ஆரம்பித்திருந்தார்.

ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி! | Ranils Indian Show Is A Joke

இருப்பினும், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்திய தரப்பில் இருந்து அதிபர் ரணில் மட்டுமன்றி, மாலைதீவு (Maldives) , நேபாளம் (Nepal), பூட்டான் (Bhutan) மற்றும் வங்கதேசம் (Bangladesh) போன்ற பிராந்தியத்தில் உள்ள மற்ற நாட்டுத் தலைவர்களும் அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டனர்.

சில அழைப்பிதழ்கள் மோடியால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வட்டமேசை கலந்துரையாடல்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வட்டமேசை கலந்துரையாடல்

எவ்வாறாயினும், ஒரு பெரிய ஊடக குழுவுடன் நிகழ்ச்சியை நடத்த அதிபர் ரணில் இந்தியா சென்றிருந்தாலும், அவரை வரவேற்க இந்திய அரசாங்கத்தின் மேலதிக செயலாளர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் மிளிர்ந்த நட்சத்திரம்

மேலும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரம் மாலைதீவின் புதிய அதிபரே தவிர வேறு யாருமில்லை. மாலைதீவின் புதிய அதிபர் சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருந்ததால், இந்திய பிரதமருக்கும், மாலைதீவு அதிபருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி! | Ranils Indian Show Is A Joke

ஆனால் மாலைதீவு அதிபர், மோடியின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதால் அனைவரது கவனமும் ரணிலை விட மாலைதீவு அதிபர் மீதே குவிந்தது.

கடந்த ஐந்து மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் பெற்ற கடன் எவ்வளவு தெரியுமா..!

கடந்த ஐந்து மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் பெற்ற கடன் எவ்வளவு தெரியுமா..!

ரணிலுக்கு 3 நிமிடங்கள்

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு அரச தலைவருக்கும் தம்முடன் கலந்துரையாட மூன்று நிமிடங்களை மோடி அளித்திருந்தார். அதன்படி, ரணிலும் அந்த மூன்று நிமிட காலத்திற்குள் மோடியுடன் தனிப்பட்ட முறையில் பேச முடிந்தது.

ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி! | Ranils Indian Show Is A Joke

மேலும், அதிபர் ரணிலுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையே கடந்த காலத்திலிருந்து மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதன்படி, காந்தி குடும்பத்தினருக்கும் அதிபர் ரணிலுக்கும் இடையே சந்திப்பு இருக்கும் என பலரும் நினைத்தனர்.

மைத்திரி பதிவு செய்துள்ள மோசமான வரலாற்று சாதனை

மைத்திரி பதிவு செய்துள்ள மோசமான வரலாற்று சாதனை

காந்தி குடும்பத்துடனான உறவு

ஆனால் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து காந்தி குடும்பத்தினர் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) சந்தித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi)சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் பிரியங்கா காந்தி(Priyanka Gandhi) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரணிலின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத இந்திய விஜயம் : 3 நிமிடம் கொடுத்த மோடி! | Ranils Indian Show Is A Joke

இவ்வாறான சூழ்நிலையில், திட்டமிட்டபடி இந்திய விஜயத்தில் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், திடீரென விஜயத்தின் முடிவில், அதிபர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில், அதிபர் ரணில் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைத்ததாகவும் அதனை, மோடி ஏற்றுக்கொண்டதாகவும் மற்றும் மோடி ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருவார் எனதெரிவித்தது.

அதிபர் ஊடகப் பிரிவினால் இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், அவ்வாறான அறிவிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சு அல்லது இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.

தமிழ் பொது வேட்பாளர்... காலம் தாழ்த்திய செயற்பாடு: தமிழ் சட்டத்தரணி சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளர்... காலம் தாழ்த்திய செயற்பாடு: தமிழ் சட்டத்தரணி சுட்டிக்காட்டு

மேலும், ஓகஸ்ட் மாதத்திற்குள் அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்பதால், இதுபோன்ற தேர்தல்களின் போது மோடி இலங்கைக்கு வருவார் என நினைக்க முடியாது.    


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி