யாழ் போதனாவில் அனைவரையும் வியப்படைய வைத்த வளர்ப்பு நாய்: இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்
யாழில் (Jaffna) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உரிமையாளரை காண வளர்ப்பு நாயொன்று வைத்தியசாலைக்கு வருகை தந்த நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் (19) யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் என்பதால் உறவினர்கள் பலர் வந்து சென்று கொண்டிருந்துள்ளனர்.
வளர்ப்பு நாய்
இதன்போது 24 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியைச் சந்திக்க, அவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் திடீரென வைத்தியசாலைக்குள் வந்துள்ளது.
எந்த குழப்பமோ சத்தமோ ஏற்படுத்தாமல் அமைதியாக படுக்கைகளுக்கிடையே நடந்த அந்த நாய், இறுதியில் நேராக தனது உரிமையாளரின் படுக்கை அருகே சென்று நின்றுள்ளது.
வாசனையால் தனது உரிமையாளரை அடையாளம் கண்டு, கண்களில் பாசம் பொங்கி நோக்கிய அந்த தருணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தனிச்சிறப்பான நிகழ்வு
நோயாளியும் தன் அன்பு நாயைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சிரித்துள்ளதுடன் அந்த சிறிய தருணம் அவருக்குப் பெரும் ஆற்றலாக அமைந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் பலரும், “மனிதனை விடவும் மிருகங்களின் பாசம் அதிகம்” என்று உருகி கருத்து தெரிவித்துள்ளனர்.
நாயின் அன்பும், அதற்கான நம்பிக்கையும் மற்றும் உரிமையாளர் மீதான பற்றும் அனைவரின் மனதையும் நெகிழச்செய்துள்ளது.
இச்சம்பவம் யாழ் வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பான நிகழ்வாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
