வட்டி விகிதக் குறைப்பு - மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
கொள்கை வட்டி விகிதக் குறைப்பின் பலனை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு வங்கிகள் செயற்படவும், வட்டி விகிதங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், வங்கி வட்டி விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தாலும், அவை மேலும் குறைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக வங்கிகளுக்கு சலுகை காலம் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், அந்தக் காலப்பகுதியில் கொள்கை வட்டி வீதக் குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்கி சந்தை வட்டி விகிதங்களைக் குறைக்காவிட்டால், 2018 ஆம் ஆண்டைப் போன்று வங்கிகளுக்கு இலக்குகளை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் வங்கிகள் கடன் அட்டை வட்டி வீதத்தை 2 வீதத்தால் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணவீக்கம்

நேற்று (05) இடம்பெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வைப்பு வசதி வீதத்தை 11 வீதமாகவும், வழமையான கடன் வசதி வீதத்தை 12 வீதமாகவும் குறைப்பதற்கு செயற்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகளை ஆராய்ந்த பின்னரே நாணயச் சபை இந்தத் தீர்மானத்தை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாத இறுதியில் பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டும் என்றும், பின்னர் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் மேலும் குறையும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 6 மணி நேரம் முன்