தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Sri Lankan Tamils Suresh Premachandran Sri Lanka General Election 2024
By Sathangani Oct 25, 2024 10:10 AM GMT
Report

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்தார்.

கடந்த 22.10.2024ஆம் திகதி மல்லாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த கோரிக்கையாக நீண்டகாலம் இருந்து வருகின்றது.

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு பறந்த கடிதம்

சம்பந்தனின் உத்தியோகப்பூர்வ இல்லம் குறித்து அநுர அரசுக்கு பறந்த கடிதம்

தமிழரசுக் கட்சி

2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்புடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது.

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Reject The Forces Are Disintegrating Tamil Nation

அந்த ஐக்கிய முன்னணிக்கு ஓர் அமைப்பு வடிவம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான தலைவர், செயலாளர் உட்பட நிறைவேற்றுக் குழுக்கள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும் அது தேர்தல்கள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற விடயங்களை அதன் தொடக்கத்திலிருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தி வந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் அதனைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது மாத்திரமல்லாமல் உட்கட்சி ஜனநாயகம் என்ற எதுவுமே இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது படிப்படியாக சீரழிந்து போனது.

குறிப்பாகக் கூறுவதாக இருந்தால், தமிழரசுக் கட்சிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்து ஒழிக்க வேண்டுமென்ற நிகழ்ச்சி நிரலுடனும் தேசிய இனப்பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடனும் செயற்பட்டார்கள் என்பது வெளிப்படை.

அறுகம்பை விவகாரம்! சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதியா : முன்னாள் எம்.பி பகிரங்கம்

அறுகம்பை விவகாரம்! சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதியா : முன்னாள் எம்.பி பகிரங்கம்

சிறுபிள்ளைத்தனமான விடயம்

இன்று தமிழரசுக் கட்சியும் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் தனக்குள் சின்னாபின்னப்பட்டு தீர்க்கமான எந்த முடிவுகளும் எடுக்க முடியாமல் நீதிமன்றம்வரை சென்றிருக்கிறது.

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Reject The Forces Are Disintegrating Tamil Nation

இத்தகைய ஒரு நிலையில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் பல ஆசனங்களை எடுத்து ஒரு வலுவான நிலையில் நாடாளுமன்றம் சென்று புதிதாக வரவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போமென சுமந்திரன் (M. A. Sumanthiran) கூறுவது சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்குரிய விடயமுமாகும்.

தனது கட்சிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் நீதிமன்றம்வரை சென்றது மாத்திரமல்லாமல் தமிழரசுக் கட்சியினுடைய வேட்பாளர் நியமனங்களை நிராகரித்து அதே கட்சியைச் சார்ந்த முக்கியஸ்தர்களை சுயேட்சைக்குழுவாக போட்டியிட வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைச் சிதறடித்து அதிலிருந்த அனைத்துக் கட்சியினரும் வெளியேறக் காரணமாக இருந்தவர்கள் பின்னர் தமது கட்சியான தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னப்படுத்தியவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றோ தமிழ்த் தேசியத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது.

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை: சந்தேகநபர்கள் குறித்து வெளியான தகவல்

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கை: சந்தேகநபர்கள் குறித்து வெளியான தகவல்

இனப்பிரச்சினை தீர்வு

எனவே இத்தகையவர்கள் நாடாளுமன்றம் செல்வதென்பது தமிழ்த் தரப்பு ஒற்றுமை படாமல் தொடர்ந்தும் சிதறிப்போகவே வழிவகுக்கும் என்பதுடன் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு இது எந்த விதத்திலும் உடன்பாடானதாகவோ உந்து சக்தியாகவோ இருக்க மாட்டாது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Reject The Forces Are Disintegrating Tamil Nation

மேலும், எந்தவிதமான கொள்கை முடிவுகளுமின்றி தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவோ எவ்வித தொலைநோக்குமற்று இருக்கக்கூடிய சில தனிநபர்கள் சுயேட்சைக் குழுக்களாக தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முனைந்திருப்பதும் வருந்தக்கூடிய ஒரு செயலாகும்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி களம் பல கண்டு சகல துன்பங்கள், துயரங்கள், வலிகளுக்கு முகங்கொடுத்து எமது மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது சொந்தப் பிரதேசத்தில் சுயாட்சியுடன் வாழவேண்டும் என்ற நோக்குடன் செயற்படக்கூடிய போராட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்

யாழ். பல்கலைக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்

பொது வேட்பாளர்

இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி குறுகிய காலத்தில் 2,26,000 வாக்குகளை எடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை தீரக்கப்பட வேண்டுமென்பதை மிக உறுதியான குரலில் அனைவரினதும் காதுகளுக்கும் எட்டச் செய்தவர்கள்.

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் | Reject The Forces Are Disintegrating Tamil Nation

அதனுடைய தொடர்ச்சியாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஓர் அமைப்பாக மாத்திரமல்லாமல் இந்த ஐக்கிய முன்னணிக்குள் அனைவரையும் இணைத்து அதனை பலமிக்க சக்தியாக்கி, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் மாத்திரமே.

ஐக்கியத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களையும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து இந்தத் தேர்தலை ஒரு கேலிக்கூத்தாக்க முனையும் சுயேட்சைக்குழுக்களையும் தமிழ் மக்களுக்கு எது நடந்தாலும்சரி தென்னிலங்கை சிங்களக் கட்சிகளுடன் இணைந்துதான் செயற்படுவோம் என்கின்ற தமிழ்த் தரப்பு கட்சிகளையும் நிராகரித்து தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்களாகவும் தமிழ் மக்களின் உண்மையான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கக்கூடிய சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை பலமிக்க சக்தியாக நாடாளுமன்றம் அனுப்புவதனூடாக தமிழ் மக்களாலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்...! கம்மன்பில அதிரடி தகவல்

புதிய அரசில் வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்...! கம்மன்பில அதிரடி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026