இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புதல் ஒக்டோபர் மாதத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 587.7 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் 712 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 20.1 சதவீத உயர்வு என கூறப்படுகின்றது.
ஜனவரி - ஒக்டோபர் மாதங்களுக்கான மொத்த பணம் அனுப்புதல் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இது கடந்த வருடம் 5.43 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதன்படி, புலம்பெயர் தொழிலாளரகள் பணவனுப்புதல் 215.8 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |