கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தடை உத்தரவானது இன்று (09) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
அதன்படி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் இன்றும் (09.06.2025) நாளையும் (10.06.2025) நாளை மறுதினமும் (11.06.2025) ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று அறிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற கட்டளை
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் நடைபெற்றது. குறித்த போராட்டம் நாளைய தினமும் நடைபெறவுள்ளது.
திஸ்ஸ விகாரையில் நாளை நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர்.
27 பேருக்கு தடை
இந்நிலையில் பலாலி காவல்துறையினரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



