மட்டக்களப்பு விமான நிலையத்தில் தீ: சர்ச்சையை கிளப்பிய வதந்தி
மட்டக்களப்பு (Batticaloa) விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக இன்று (21.09.2024) மாலை தொடக்கம் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமான நிலையத்தின் அதிகாரியொருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பான செய்தி என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
விமான நிலையத்தின் வெளியே இருந்த குப்பைக் கிடங்கு தீ மூட்டப்பட்டுள்ளதால், அப்பிரதேசம் எங்கும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
விமான நிலையத்தில் தீவிபத்து
அதன் காரணமாக விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவியுள்ளது என்றும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சற்று முன்னர் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தற்போதைக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
அத்துடன் சுமார் 200க்கும் அதிகமான விமானப்படையினர் தற்போதைக்கு விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |