இறக்குமதி தடைகளில் ஏற்படவுள்ள திருத்தம்! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்நிய செலாவணி நெருக்கடி
அதேவேளை, அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளதாகவும், அது தீர்க்கப்பட்டதும் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடை காரணமாக சில துறைகளில் தடை ஏற்படுத்திய தாக்கத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தும் மேற்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

