உக்ரைன் இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்
கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா அருகே உக்ரைன் இராணுவ விமானம் ஒன்றை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விமானத்தை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று சுமி பிராந்தியத்தில் பீரங்கி பயிற்சி மையத்தையும் ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷ்ய படைகள் அழித்துள்ளன.
ரஷ்ய தாக்குதலால் பற்றி எரியும் மடாலயம்
இதேவேளை கிழக்கு உக்ரைனில் ஸ்வியாடோகிர்ஸ்க் லாவ்ராவில் உள்ள பழமையான மடாலயத்தில் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு 300 அகதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், 60 குழந்தைகள் உள்ளிட்டோர் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இங்கு தீப்பற்றி எரிய காரணம், ரஷிய படைகளின் தாக்குதல்தான் என்று உக்ரைன் ராணுவ அதிகாரி யூரி கோசேவெங்கோ ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்துள்ளார். எரியும் மடாலயத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்
