உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்தியுள்ள பயங்கர தாக்குதல்! குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஆறு மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு, உயரமான குடியிருப்பு கட்டிடம் ஒன்று கடுமையாக சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக நகரத்தின் இராணுவ நிர்வாகம் முதலில் தெரிவித்த போதிலும், பின்னர் அந்தத் தகவல் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியான தாக்குதல்கள்
நகர மையத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ள அந்த உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் ஒன்பதாவது தளம் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து 15 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: spokesman.com
இதன்போது, ஜெட் எஞ்சின் மூலம் இயங்கும் ட்ரோன் ஒன்றினால் குறித்த கட்டடிடம் தாக்கப்பட்டதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் கீவ் நகரில், இதற்கு முன்னதாக நடந்த தாக்குதல்களிலும் ஆறு பேர் காயமடைந்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |