ரஷ்யா நடத்திய புதிய போர்: சிக்கலில் உக்ரைன்
ரஷ்யாவின் (Russia) புதிய பயங்கர ஆயுதம் உக்ரைனில் (Ukraine) நடக்கும் போரை இன்னும் கோரமாக மாற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரோடின்ஸ்கே நகரம், ரஷ்யாவின் புதிய தாக்குதல்களின் மையமாக மாறியுள்ளது.
சமீபத்தில் 250 கிலோகிராம் எடையுடைய கிளைடு குண்டு (glide bomb), நகரின் நிர்வாகக் கட்டிடத்தைத் தாக்கி மூன்று குடியிருப்பு பகுதிகளையும் அழித்தது.
பயங்கர ஆயுதம்
இதனுடன், நகரம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்களில் சத்தம் முழங்கியதுடன் ரஷ்யா, போக்ரோவ்ஸ்க் நகரத்தை சுற்றிவளைத்து வெல்ல முயற்சி செய்வதாகவம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நகரத்திற்கு செல்லும் சாலை வழிகளை துண்டிக்க ரஷ்யா தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்த தாக்குதல்களில் புதிய ஆபத்தான ஆயுதமாக “Fibre optic drones” வெளிப்பட்டுள்ளதா குறிப்பிடப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
இந்த ட்ரோன்கள், சாதாரண ட்ரோன்களைப்போல் ரேடியோ அலையை பயன்படுத்தாது, பைபர் கேபிள் வழியாக நேரடி கட்டுப்பாட்டை பெற்றுள்ளன.
இதனால் அவை எலக்ட்ரானிக் தடையிலிருந்து பாதுகாப்பாக இருக்கின்ற நிலையில், உக்ரைன் வீரர்கள், இந்த ட்ரோன்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களில் கூட தீவிர கண்காணிப்பு எதிர்நோக்க வேண்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போர் முன்னணியில் இருக்கும் வீரர்கள், கடுமையான மன அழுத்தம் மற்றும் இடைவேளையின்றி நீண்ட நேரம் போராட வேண்டியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய ட்ரோன் யுக்திகள், போரை மாற்றும் பயங்கர ஆயுதமாக மாற்றியுள்ளதாகவும் உக்ரைன், தொடர்ந்து எதிர்ப்பு அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
