அதிகரிக்கும் போர் மேகம் - அமெரிக்கா எடுத்துள்ள முடிவு
உக்ரைனில் போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது தூதரகத்தை அங்கியிருந்து அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படை நடவடிக்கையினை எந்த நேரமும் தொடுக்கலாம் என்ற பதட்டம் நிலவிரும் நிலையில், பல உலக நாடுகள் அமைதியினை நிலை நாட்டுமாறு வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை உக்ரைன் அதிபர் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் பல நாடுகளும் தமது பிரஜைகளை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளன.
இத்தகைய பின்னணியில் அமெரிக்கா தனது தூதரகத்தினை அகற்றுவது பொருத்தமானது என வெளியுறவுச் செயலாளர் அன்டனி பிளிங்கள் நியாப்படுத்தியுள்ளார்.
ரஸ்யா, உக்ரைன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படையினரைக் குவித்து வைத்துள்ள போதிலும் எந்தவொரு படை எடுப்பு நடவடிக்கையும் இல்லை என ரஷ்ய அதிபர் பிளடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.