புடினிடமிருந்து மீளப்பெறப்படவுள்ள கௌரவ கருப்புப் பட்டி- தடை செய்யப்பட்டது சர்வதேச வியைாட்டுக்களுக்கான களம்!
உலக டேக்வாண்டோ சம்மேளனம் ரஷ்ய அதிபருக்கு டேக்வாண்டோ விளையாட்டுக்கான கௌரவ கருப்பு பட்டியை வழங்கியிருந்தது. ஆனால் தற்போது புடினுக்கு வழங்கிய கருப்புப் பட்டியை மீளப்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கெளரவத்திற்குரிய டேக்வாண்டோ கருப்பு பட்டியை (Taekwondo Black Belt) இரத்து செய்ய உலக டேக்வாண்டோ சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாகவே, இந்த கௌரவமான கருப்புப் பட்டியை நீக்குவதற்கு குறித்த அமைப்பு தீர்மானித்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, உலகளாவிய மாஸ்டர் அட்டை (Mastercard) கட்டண வலையமைப்பு ரஷ்யாவில் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதன் விளைவாக மாஸ்டர் அட்டைக்கான கட்டணத் தளத்தைப் பயன்படுத்தி இனி ரஷ்யாவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஃபிஃபா மற்றும் சர்வதேச ரக்பி யூனியன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் உறுப்புரிமையை இடைநிறுத்தி வைத்துள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை அவர்களது அங்கத்துவம் இடைநிறுத்தப்படும் என சர்வதேச ரக்பி ஒன்றியம் அறிவித்துள்ளது.