மீண்டும் கொரோனா வைரஸ்: வெளியான அதிர்ச்சிகர கணிப்பு
ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்பவரின் தீர்க்கதரிசனம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
1999 ஆம் ஆண்டு "The Future As I See It" எனும் புத்தகத்தை எழுதிய ஜப்பானிய மாங்கா கலைஞரான ரியோ டட்சுகி என்பவரின் கணிப்புக்கள் தொடர்ந்து பாபா வாங்காவின் கணிப்புக்களுடன் ஒப்பிடப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் மக்கள் மத்தியில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
எதிர்காலக் கணிப்பு
இதன்படி, 2020 ஆம் ஆண்டு ஒரு மர்ம வைரஸ் உருவாகும் என்றும், அது ஏப்ரல் மாதத்தில் குறைந்து மறைந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2030 ஆம் ஆண்டில் அதே வைரஸ் மீண்டும் மிகவும் மோசமான தாக்கத்துடன் உருவாகி பரவும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்க்கதரிசனம்
இதே தீர்க்கதரிசனம் தற்போது பாபா வாங்காவுடைய எதிர்காலக் கணிப்புகளுடன் ஒப்பிடப்பட்டு வைரலாகி வருகின்றது.
அதன்படி 2030 இற்கும் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில், வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஏற்கனவே, பாபா வங்காவின் கணிப்புகள் பல பலித்திருக்கும் நிலையில் இதுவும் நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
