மன்னார் வைத்தியசாலையில் பதற்றம் - அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக் குத்துத் தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மன்னார் வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீதே கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் இன்று அதிகாலையில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த மற்றும் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.