சத்தியாகிரகத்தை கைவிட்ட சுரேஷ் சலேயின் ஆதரவாளர்கள்
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரே, அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகம் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சத்தியாகிரகம் கடந்த 08.05.2026 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பின்னணி குறித்து ஆராய்கையில்,
ஷானி அபேசேகரவுக்கு கடிதம்
தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சலே தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் கடந்த 7ஆம் திகதி வெளிப்படுத்தினர்.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய சலேயின் சட்டத்தரணி, தனது இறுதி உயிலை உருவாக்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, சட்டத்தரணிகள் உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு சலே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், அந்த கடிதத்தின் மூலம் சலேவை வசதிகள் கொண்ட வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றுமாறும், சுயாதீன மருத்துவக் குழுவொன்றின் மூலம் அவரது ஆரோக்கிய நிலையை ஆராயுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் நலன் வேண்டி 'சர்வஜன அதிகாரம்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு பெல்லன்வில ரஜமகா விகாரையில் மாலை நடைபெற்றது.
ஆரம்பமான சத்தியாக்கிரகம்
இந்நிகழ்வில் சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் கலந்துகொண்டனர். அத்துடன், சுரேஷ் சலேவை மனிதாபிமானமற்ற முறையிலும் கொடூரமாகவும் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து 08 ஆம் திகதி முதல் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சிகள் தயாராகின.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், அவர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அந்த திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 25 நிமிடங்கள் முன்