அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் சட்டம்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பாதுகாப்புப் பட்டிகளை அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய வீதிப் பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
வாகனங்களின் பின் இருக்கைகளுக்கு இருக்கைப் பாதுகாப்புப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலக்கெடு ஜூன் மாதம் 19 ஆம் திகதி அன்று முடிவடையும் என்று அந்த சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்தார்.
கடுமையான நடவடிக்கை
ஜூன் 19 ஆம் திகதி காலக்கெடுவிற்குப் பிறகு இந்த விதிமுறையின் நடைமுறைப்படுத்தல் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விதிமீறல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |