சீனாவின் பெரும் திட்டம் - உலகம் முழுவதும் சட்டவிரோத ஊடுருவல்
உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்கள்
பிரித்தானியா, கனடா, உள்ளிட்ட 21 நாடுகளில் 30 சட்டவிரோத காவல் நிலையங்களை அமைத்து சீனா கண்காணித்து வருவதாக புலனாய்வு நாளேடான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் வல்லரசாக தன்னைக் காட்டிக்கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலும் இதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ், உக்ரைன், ஸ்பெயின், ஜெர்மனி, பிரித்தானியா, கனடா, அயர்லாந்த் ஆகிய நாடுகளில் இதுபோன்ற சீனக் காவல் நிலையங்கள் சட்டவிரோதமாக செயற்படுகின்றன.
சீன ஆதிக்கம்
கனடாவில் பொதுப் பாதுகாப்பு அமைப்புடன்(பிஎஸ்பி) சேர்ந்து இதுபோன்ற முறையற்ற காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளது.
இதில் 3 காவல் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளன.
இந்த சட்டவிரோத காவல் நிலையங்கள் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் தேர்தலிலும் சீனா தனது ஆதிக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
சீனாவின் இந்தச் செயல், மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.