பாடசாலையில் துப்பாக்கிசூடு -எட்டு மாணவர்கள் துடிதுடித்து பலி -வெளிநாடொன்றில் பயங்கரம் (படங்கள்)
சேர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் மாகாணம் விரகார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு மாணவர்கள் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
குறித்த பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 14 வயது மாணவனே திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையான கல்வி செயற்பாடு
பாடசாலையில் இன்று வழக்கம் போல மாணவ - மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, குறித்த மாணவன் திடீரென இந்த துப்பாக்கிசூட்டை நடத்தியுள்ளான்.
ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்டவர்கள் மீது அந்த மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மாணவன் கைது
மேலும் ஒரு ஆசிரியர் உட்பட 6 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய கேகே என்ற மாணவனை கைது செய்தனர்.



