வெளிநாட்டில் நோயாளியான இலங்கையர் - எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
வெளிநாட்டில் நோயாளி
சவுதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிந்து மூளையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடுமையாக சுகயீனமுற்றிருந்த இலங்கையர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் இன்று (28) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான சேகு அப்துல் காதர் இப்ராஹிம் என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாகனம் ஓட்டும் பணிக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருமாறு அவரது குடும்பத்தினர் முகவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் துரித நடவடிக்கை
அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக செலவழித்து நோயாளரான இலங்கையரை இன்று காலை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.
இவர் ஒரு நோயாளி என்பதனால் சுகாதார அமைச்சின் உதவியுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்ததோடு குறித்த நோயாளி விமானத்தில் விசேட வசதிகளுடன் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.