விமலின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
போலியான கடவுச்சீட்டு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொய்யான தகவல்களை சமர்ப்பித்து முறைசாரா இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்ட சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது மேன்முறையீடு (மே 31) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான சசி வீரவன்ச சிறைச்சாலையால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இரண்டு வருட சிறைத்தண்டனை
சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) இரண்டு வருட சிறைத்தண்டனையும் 100,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதன்படி, இதற்கு எதிராக சசி வீரவன்சவின் சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். 233/16, ரத்நாயக்க மாவத்தை, தெற்கு தலங்கம, பத்தரமுல்லை என்ற முகவரியில் வசிக்கும் சமிந்த பெரேரா என்பவர் 2015 ஜனவரி 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
2010 செப்டெம்பர் 13 மற்றும் 2015 பெப்ரவரி 26 வரையான காலப்பகுதியில் கொழும்பின் அதிகார வரம்பில் இலங்கை கடவுச்சீட்டு இலக்கம் D3642817 ஐ சட்டபூர்வ அதிகாரம் இன்றி வைத்திருத்தல் (இல. 1993 இல. 16, 1998 இல. 42 மற்றும் 2006 இல. 31. தி 2006). சட்டங்களால் திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் பிரிவு 45 (1) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கூறி 2015 இல் அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
எனினும், இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.