அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: 22 வயதுடைய இளைஞன் பலி
Sri Lanka Police
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kiruththikan
துப்பாக்கிச் சூடு
கம்பஹா, கெஹல்பத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
20 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு 21 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 20 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி