இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை
இரத்தினபுரி பொது வைத்தியசாலை சேவையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்ட குழு உறுப்பினர் வைத்தியர் மகேந்திர பண்டார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது விசேட வைத்தியர்கள் எவரும் இல்லை.
பாரிய சிக்கல் நிலை
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய கடந்த ஒன்றரை வருடக் காலப்பகுதியில் 272 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதேவேளை 514 ஏனைய வைத்தியர்களும் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வைத்தியசாலை மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றில் சேவையாற்றிய பல விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
விசேட வைத்தியர்கள் இன்மையால், அவசர சிகிச்சை பிரிவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
