சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஒருவித ‘நோய்’
ஒருவித நோய்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஒருவித நோய் உள்ளதாக அந்தக்கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆளுங்கட்சி பதவிகள் இல்லாது இருக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
பதவிகள் இல்லாது இருக்க முடியாது
1994ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு மேலாக நாம் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டின் அதிபராக இருந்திருக்கிறார்கள். இதனால் சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், பதவிகள் இல்லாது இருக்க முடியாது. இதுவொரு நோய் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்தில் இணைந்து அண்மையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றையதினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அரசியல் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.