கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை முதன்முறையாக தரையிறங்கிய விமானம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது.
"இந்த விமானம் இன்று முதல், வாரத்தில் நான்கு நாட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கும் இடையில் நேரடி விமான சேவையில் ஈடுபடவுள்ளது" என Aitken Spence நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த குடலியனகே தெரிவித்தார்.
வாரத்தில் நான்கு நாட்கள் சேவை
Aitken Spence சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இலங்கை முகவர் ஆகும்.
ஞாயிறு, புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்படவுள்ள சுற்றுலாதுறை
இந்த விமானம் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் கட்டுநாயக்கா மற்றும் சாங்கி இடையே சேவையில் ஈடுபடும் 53 வருடங்களாக தொடர்ச்சியான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ், இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு, இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை வலுப்படுத்தவும் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக குடலியனகே தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் நிகழ்ச்சிகளை கண்டு களித்திட இதனை அழுத்தவும் |

