சிறிலங்காவின் மீட்பரே ரணில் - ருவான் விஜயவர்தன புகழாரம்
எரிவாயு கொண்டு வர மில்லியன் டொலர்கள் இல்லாத நாட்டை இரண்டு மாதங்களுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கையகப்படுத்தி வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அதிபர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிபரின் வியூகம்
இதுதொடர்பில் மேலும் அவர்,
“ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது எரிவாயு வாங்க ஒரு மில்லியன் டொலர் கூட இல்லாத நிலையில் நாடு இருந்தது.
பின்னர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்நாட்டின் வர்த்தகர்கள் மற்றும் வங்கிகளுடன் கலந்துரையாடி பணத்தை கண்டுபிடித்து எரிவாயு கொண்டு வரும் திறனைப் பெற்றார்” என்றார்.
இத்துடன், சிறிது சிறிதாக எமது நிதியை பலப்படுத்தி நாட்டின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம் எனவும், இந்த உண்மை தெரியாமல் எதிர்க்கட்சிகள் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
