பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதி : பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து செய்யப்பட்ட நபரின் விடுதலை குறித்து ஆராய்ந்து வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சரின் திருகோணமலை (Trincomalee) மாவட்டக் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்துடன் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த ஒருவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல கோணங்களில் பேசப்பட்டு வருகிறது.
சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்வு
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா, ”வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு அகதி அந்தஸ்து கோரும் எம் நாட்டவர்கள். மீண்டும் நாடு திரும்புவதை நாம் வரவேற்கின்றோம்.
குறித்த விடயம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு தாம் கலந்துரையாடி வருகிறோம். அதற்கு தேவையான சட்டமூலங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். வெகு விரைவில் அதுதொடர்பிலான அறிவித்தல்கள் வெளியிடப்படும்.
மேலும் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரது விடுதலை தொடர்பிலும் ஆராய்ந்துவருவதுடன் அதற்கான பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தப்படும்“ எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
