நாட்டிற்கு வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் - முதலிடம் பிடித்த நாடு
2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை இரண்டு மில்லியனை அண்மித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இந்த விடயம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதிகாரசபை புள்ளிவிவரங்களின்படி, 2025 நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம், இந்த ஆண்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,923,502 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (431,235) வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (177,167), ரஷ்யா (138,061), ஜெர்மனி (119,415) மற்றும் சீனா (113,619) ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என சபை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |