கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் செயற்படும் அரச பேருந்துகள்!
கிளிநொச்சியில் (Kilinochchi) ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை அரச பேருந்தொன்று ஏற்றி சென்றுள்ளது தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (15) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றே இவ்வாறு பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது.
பேரூந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேரூந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேரூந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேரூந்து பயணித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேரூந்து இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேரூந்தின் வழி அனுமதி தடம் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அரச பேருந்தொன்று இவ்வாறு செயற்படுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேரூந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
